சண்டிகர் வரைபடம்

Chandigarh Map in Tamil

சண்டிகர் வரைபடம்
* சண்டிகரிலுள்ள சாலைகள், ரெயில்வே தடங்கள், நதிகள், திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ தடங்கள், தொகுதிகள், பிரிவுகள், சுற்றுலா இடங்கள் முதலியவற்றை காட்டும் வரைபடம்
சண்டிகரைப் பற்றி
சண்டிகர். இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் ஆகும். அது பிரஞ்சு கட்டிட கலைஞ்ர் லெ கொபூசியரால் திட்டமிடப்பட்டது. இந்த நகரம் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் முதன்மையானது மற்றும் நாட்டின் பல யூனியன் பிரதேசங்களிடன் ஒப்பிடும் போது மிக அதிக தனி நபர் தலா வருமானம் உள்ளது குறிப்பிடத்தக்கவையாகும்.

ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நகரமாக இருப்பதால்,, உலகப் புகழ்பெற்ற நகரங்கள் பட்டியலில் மற்றும் அதன் வாழ்க்கை தரத்ததிற்காகவும் சேர்க்கப்பட்டுள்ளது. அது இரண்டு மாநிலங்களின், பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகராக இருப்பதால் சண்டிகரைக் ஒரு மதிப்புமிக்க நகரம் ஆகும். இன்று, அது நவீன இந்தியாவின் ஒரு நகரம் என அங்கீகரிக்கப்படடுள்ளது.

நீங்கள் அதை இயற்கையின் பாதுகாப்புடன் சேர்ந்து கொண்டு நவீனமயமாக்கலுக்கு ஒரு உதாரணம் என்று சொல்லலாம். ஒரு அரிய உதாரணம் அதன் கட்டுமான திட்டமிடலில் மரங்கள் மற்றும் தாவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது உள்ளது தான். இந்த நகரம் அறிக்கைகளின் படி நாட்டின் சுத்தமான நகரம் என்று அறியப்படுகிறது அது காற்றை மாசுபடுத்ததாத தொழில்களை மட்டுமே தழைத்தோங்க அனுமதிக்கிறது அதனால் தான் நீங்கள் சண்டிகரின் காற்றும் மிகவும் புதிதாகவும் மற்றும் மாசில்லாமலும் பார்ககிறீர்கள்.இந்த நகரம், நவம்பர் 1, 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, அது வட இந்தியா முழுவதும் ஒரு குறிப்பிடத்தக்க நகரமாக இருந்து வருகிறது அழகான திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை காரணமாக நீங்கள் அதன் சுற்றுலாவும் தழைத்தோங்கி மற்றும் வட இந்தியாவில் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாறிவிட்டதையும் பார்க்க முடியும்.

சண்டிகரின் வரலாறு
இந்த இடத்தின் வரலாறு 8000 வ்ருடங்களுக்கு முன் முந்தைய நாகரீகத்தில் முதலில் ஹரப்பன்ஸ் வசித்து வந்த் போது உள்ளது.

அது மத்திய காலங்களில் ஒரு வளமான இடமாகவும் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது.பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்திற்கும் பின், 1947 இல் பஞ்சாப் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின், லாகூர் பாக்கிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டதால், கிழக்கு பஞ்சாப் தலைநகர் இல்லாமல் இருந்தது என்வே, பஞ்ச்சாபிற்கு தலைநகர் கொடுப்பதற்காக சண்டிகர் திட்டமிடப் பட்தது. எனவே ஷிவாலிக்ன் அடிவாரத்தில் சண்டிகருக்கும் இடம் தேடப்பட்டது. நகரம் முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரதம மந்திரியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டது. ஆனால் உண்மையான நகரம் வருவதற்கு முன் பல தடைகள் ஏற்பட்டன. ஒரு குழு நகரத்திற்கு ஒரு நல்ல தளம் தேர்வு செய்ய அமைக்கப்பட்டது. இந்த இடம் காலநிலை, இராணுவ பாதிப்பு, நீர் வழங்குதல், போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு பிறகு தேர்வு செய்யப்பட்டது.

அரியானா தோற்றம் கொண்ட பிறகு, இரு மாநிலங்களுக்கும் ஒரு தலைநகர் வேண்டும் ஆகையால் சண்டிகர், அதன் அருகாமை மற்றும் அது சாதித்து விட்ட முக்கியத்துவத்தின் காரணமாக, இரு மாநிலங்களின் தலை நகரமாக மாறியது.

சண்டிகரின் மக்கள்தொகை புள்ளி விவரம்
2011 கணக்கெடுப்பின் படி, சண்டிகரின் மக்கள் தொகை 10,55,150.மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி.மீட்டருக்கு 9252. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 818 பெண்கள் இது நாட்டின் மிக குறைந்த பால் விகிதத்தில் ஒரு என்று குறிப்பிடுகிறது சல்வி அறிவு விகிதம் 86.43% நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் உயரு. மக்கள் தொகையில் குழந்தைகள் 10% அடங்குவர்.

நகரம் இந்து மதம், சீக்கிய, கிரிஸ்துவர் மற்றும் முஸ்லிம்கள் போன்ற பல்வேறு மத, மக்களையும் கொண்டுள்ளது இந்து மக்கள் தொகை தான் பெரியது தொடர்ந்து சீக்கியர்கள் உள்ளனர். சண்டிகர் மிகவும் முற்போக்கானது மற்றும் கிட்டத்தட்ட 90% அபிவிருத்தி அடைந்த பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு 2% கிராமங்களில் வாழ போது பெரும்பாலான மக்கள், நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.

பெண்களின் கல்வியறிவு மற்றும் பெண் பாலின விகிதம் கவலை த்ரும் விஷயங்களாக உள்ளன. அரசாங்கம் இங்கு பெண்கள் நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில், பெண் பாலியல் விகிதம் துரதிஷ்டமானது மற்றும் முன்னேற்றம் தேவை,ப்படுகிறது.

சண்டிகரின் புவியியல்
சண்டிகர் இமயமலை ஷிவாலிக் வரம்பில் அடிவாரத்தில் அமைந்துள்ளது அது கடல்மட்டத்திற்கு 321 மீட்டர் உயரத்தில் உள்ளது. அது 30 டிகிரி 14 வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 76 டிகிரி 14 கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது. அது வளமான மண் கொண்டது மற்றும் ஏராளமான பயிர்களை உறபத்தி செய்கிறது. இங்குள்ள நிலம் வளமான வண்டல் மண்நை தன்னகத்தே கொண்டிருக்கிறது மற்றும் மேற்பரப்பில், கற்பாறைகள், கற்கள், களிமண் வண்டல், மணல், கற்களை மற்றும் செங்கற்கள் கொண்டுள்ளது..

யூனியன் பிரதேசத்தில் 5 நகரங்கள் மற்றும் சுமார் 25 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் ஒரு தாலுகா மற்றும் சமூக அபிவிருத்தி தொகுதிகள் உள்ளது. தலைநகர் இயற்கையில் மிதவெப்ப மண்டலம் மற்றும் சூடான கோடை, நம்பமுடியாத, மழை மற்றும் குளிர் என வகைப்படுத்தப்படும். வெப்பநிலை இயற்கையில் வேறுபடுகிறது மற்றும் -1 டிகிரி செல்சியஸ் இருந்து 46 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. குளிர்காலம் தன்னுடன் உறைபனிகளைத் கொண்டு வருகிறது... அது துணை-வெப்பமண்டல கண்ட பருவமழை காலநிலையை. அனுபவிக்கிறது. ஆண்டு மழையளவு சுமார் 1100 மி.மீட்டர். நகரம் முழுவதும் சுகானாவில் சோ மற்றும் பாட்டியாலி ராவ் போன்ற வருடாவருடம் ரவுலெட்ஸ் மூலம் வெளியேற்றப்படுகிறது.

இந்த இடத்தில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி, நீங்கள் பெரிய்ச் எண்ணிக்கையில் நீர் துளைகள் மற்றும் இயற்கை மீளுருவாக்கத்துடன் சேர்த்து பல்வேறு இனங்கள் மற்றும் வனவிலங்குக்கு சிறந்த வாழ்விடத்துடன் நல்ல தோட்டங்களை ஒரு பார்க்க முடியும். பல்வேறு மரங்கள், மூலிகைகள், புதர்கள், புற்கள் மற்றும் ஏறுபவைகளை சுகானாவில் வனவிலங்கு சரணாலயத்தில் காணலாம் மற்றும் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன தவிர, நீங்கள் சைபீரியா மற்றும் ஜப்பானிலிருந்து இடம் பெயரும் பறவைகளையும் பார்க்கலாம்.

இன்று 3245 ஹெக்டேர் விரிவாக்க காடுகள் கீழ் மாற்றப்பட்டு மற்றும் இப்போது வனவிலங்குகளுக்கு ஒரு சொர்க்கமாக உள்ளது. இடத்தில் இரண்டு தேசிய ரிசர்வ் காடுகள் மற்றும் ஆபத்தான இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளது.

சண்டிகரின் பொருளாதாரம்
சண்டிகர் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களுக்கு அடிப்படை என அங்கீகரிக்கப் பட்டதால்,அது ஒரு முக்கியமான அரசாங்க வேலையில் அமர்த்துபவராக இந்த பகுதியில் ஆகி விட்டது. ஜனத் தொகையில் பெரும்பாலனவர்கள் அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். தலைநகர் நடுத்தரத்திலிருந்து பெரிய தொழிற்சாலைகளுடன் பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. சிறிய அளவு தொழிற்சாலைகள் சுமார் 2500 அலகுகள் உள்ளன அது ஒரு வளர்ந்து வரும் அவுட்சோர்சிங் மற்றும் தொழில்நுட்ப நகரமான சேவைகள் மையமாக உள்ளது.

அங்கு காகிதம் தயாரிக்கும், சுகாதாரபாகங்கல், இயந்திர கருவிகள், அடிப்படை உலோகங்களின், வாகன பாகங்கள், மருந்துகள் மற்றும் மின் சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. அங்கே உணவு தயாரிப்புகள் தொடர்பான தொழிற்சாலைகளும் நிறைய உள்ளன. நம்பமுடியாத உள்கட்டமைப்பு காரணமாக, சண்டிகரில் இன்று பல தொழிற்சாலைகள் மற்றும் உள்ளன. இது நல்ல இணைப்பு மற்றும் தகவல் அமைப்பு உள்ளது. நகரம் ஒரு தொழில்துறை மையமாக திட்டமிடப்படவில்லை என்றாலும், அது இந்த துறையின் மிகவும் முக்கியமானதாக இடம்பெற்றிருக்கிறது. சுற்றுலாத் துறை கூட மிகப் பெரும் அளவில் வளர்ந்து இப்போது இந்தியர்கள் அத்துடன் வெளிநாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த காரணமாக நகரின் வருமானம் அதிகரித்து அதன் மொத்த பொருளாதாரத்தில் நிறைய பங்களிப்பு செய்துள்ளது. இது நாட்டின் சில முக்கிய நகரங்களைக் காட்டிலும் அதிக தனிநபர் வருவாய்க்கு அறியப்படுகிறது.

தொழில்களைப் பொறுத்த வரை காகிதம் தயாரித்தல், அடிப்படை உலோகங்கள், சுகாதார பாகங்கள், வாகன பாகங்கள், இயந்திர கருவிகள், மருந்துகள் மற்றும் மின் சாதனங்கள் உலோக கலவைகள் மற்றும் இயந்திரங்கள் சண்டிகரின் முக்கிய தொழிற்துறைகள் ஆகும் மற்ற துறைகள் உணவு பொருட்கள் தொடர்பானவை.

சண்டிகரின் அரசு மற்றும் அரசியல்
சண்டிகர், ஹரியானா மற்றும் பஞ்சாபிற்கு தலைநகரமாக பணியாற்றுவதால் அது தனியாக நிர்வகிக்கப்படுகிறது. அது இந்திய யூனியன் பிரதேசமாக அங்கீகரிப்பட்டுள்ளது. அதன் நிர்வாகத் தலைவர் ஆளுநராவார் மற்றும் அவர் நிர்வாகி என்றும் அறியப்படுகிறார் மற்றும் அவர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அவருக்கு நிறைவேற்றும் அதிகாரங்கள் பெரும்பாலானவை அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

யூனியன் பிரதேசதம் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியைக் கொண்டுள்ளது மற்றும் முழு சண்டிகரையும் உள்ளடக்கியது இது ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் சட்டமன்றமாகும்.

கல்வி, சமூக நலம், லஞ்ச ஒழிப்பு, சூழல், வீட்டு வசதி, கால்நடை வளர்ப்பு, கலால் மற்றும் வரிவிதிப்பு, ஆரோக்கியம், உணவு மற்றும் விநியோகிப்பவர் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற பல துறைகளின் நிர்வாகங்களைப் பார்த்துக் கொள்ள பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சண்டிகர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ளது. ஆலோசனை கூறும் இடத்தில், ஐஏஎஸ் சேவையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கட்டளை இடும் இரண்டாவது. அதிகாரியாவார். இந்த அதிகாரி இந்திய நிர்வாக சேவை AGMU பணியாட்டொத்தைச் சேர்ந்தவர். துணை ஆணையாளர், ஐஏஎஸ் சேர்ந்தவர் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பொது நிர்வாகத்தை கட்டுப்படுத்துகிறார்.மூத்த போலிஸ் கண்காணிப்பாளர் அல்லது இந்திய காவல் பணி இங்கே சட்டம், ஒழுங்கைக் கட்டுப்படுத்துகிறது

சண்டிகரில், நகரத்தின் ஆளுகை மற்றும் அரசியலைப் பார்த்துக் கொள்ள் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன இந்திய தேசிய காங்கிரஜ், பாரதீய ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சில அரசியல் கட்சிகளாகும்.

சண்டிகரின் கலாச்சாரம்
யூனியன் பிரதேசம் அதன் கிராமிய நடனம் மற்றும் இசைக்காக அறியப்பட்டது. சடங்குகள் மற்றும் மரபுகள் பெரும்பாலும் பஞ்சாபி கலாச்சாரத்திற்கு தொடர்பான்வையாகவே நடத்தப் படுகின்றன மற்றும் இந்து மதம், சீக்கிய மற்றும் முஸ்லீம் கலாச்சாரம் பெரும்பாலும் தொடர்பாகவும் உள்ளது. உள்ளூர் கலாச்சாரம் நிறைந்த உணவு, திருவிழாக்கள், இசை மற்றும் நடனம், சமய நடைமுறை மற்றும் சடங்குகள் கொண்டுள்ளது. இங்கே நடனங்கள் மக்களை ரம்மியமாக சித்தரிக்கின்றன. பாங்ரா, கிடா, ஜூல்லி, சம்மி, டியான் பிரபலமான நாட்டுப்புற நடனங்களாகும். உள்ளூர் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் பைகாசி, குருபூரப், லோக்ரி, டிக்க, ரக்ஷாபந்தன் மற்றும் பல. திருவிழாக்கள் பல்வேறு உணவு, இனிப்பு ஏற்பாடுகள் மற்றும் பூஜை உள்ளவை.

அதன் கலாச்சாரம் மிகவும் நவீனமாக இருக்கிறது மற்றும் நீங்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மக்களையும் பார்க்க முடியும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கே வாழ்வதால் நீங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பரந்த கலவையை இங்கே பார்க்க முடியும்.

மக்கள் இங்கே ஹிந்தி அல்லது பஞ்சாபி அல்லது இரண்டையும் கலந்து பேசுகின்றனர். இந்த நகரம் கலை மற்றும் கலாச்சாரத்தை நிரூபிக்கும் ஒரு பண்பாடு உள்ளது இங்கே பாரம்பரிய உணவு வழக்கமான பஞ்சாபி மற்றும் மிகவும் காரம் உள்ளது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பல்வேறு வகை மற்றும் சுவை கொண்டு இங்கே தயார் செய்யப்படுகின்றன..

இங்கே உடைகள் மாநிலங்களில் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் போலவே உள்ளன.எனினும் பண்டிகைகள் அல்லது முக்கியமான தருணங்களில், ஆண்கல் ஷெர்வானி அணிவதை விரும்புகின்றனர் மற்றும் பெண்கல் லெஹங்கா சோளி அல்லது சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிகின்றனர்.

சண்டிகரின் மொழி
சண்டிகரின் அமைவிடம் வட இந்தியாவில் இருக்கிறது மற்றும் அங்கு பிரபலமான மொழி பஞ்சாபி. ஹிந்தியும் இங்கே பரவலாக பேச்ப்படுகிறது. ஆனால் அதன் அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்டமைப்பு கார்ணமாக, இந்த நகரம் மற்ற மாநிலங்களிலிருந்து பல்வேறு மக்களை ஈர்க்கிறது.பலகலாச்சாரமாக இருப்பது, அதை பன்மொழி உதயமாகும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது,.இது ஹரியானாவின் தலைநகரமாக இருப்பதாலும், அனேகர் ஹரியான்வி மொழியைப் பேசுகின்றன,. பெரும்பாலான மக்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் உரையாடுகின்றனர். மற்ற மாநில மக்கள் பஞ்சாபியை பேசாவிட்டால், இந்த இரு மொழிகளிலும் மேச வேண்டும். அரசாங்க அலுவலங்களில் ஆங்கிலம் உபயோகப்படுத்தப் படுகிறது. . நகரத்தின் உத்தியோகபூர்வ மொழி பஞ்சாபி. சண்டிகர் இளைஞர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த கலவையைப் பேசுகின்றனர்..

சண்டிகர் கல்வி
யூனியன் பிரதேசத்தின் கல்வி மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தது மற்றும் தகவல் மற்றும் சுவாரஸ்யமான முறைகள் வடிவில் கல்விக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. சண்டிகர் பல்கலைக்கழகங்கள் மிகவும் திறமையான தரமான கல்வி வழங்கி

திறமையான மற்றும் ஆற்றலான மாணவர்களை கடைந்தெடுத்தது அனுப்புகிறது. குழந்தைகளின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளியில் தரமான கல்வியை வழங்க அரசாங்கம் துவக்க முயற்சி எடுத்துள்ளது.இங்கே நிறைய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைப் நீங்கள் பார்க்கலாம். நிறைய தனியார் பள்ளிகள் மதசார்பற்ற பள்ளீகள் என்று அங்கீகரிக்கப் பட்டு மானியத்தைப் பெற்றுள்ளன.

கல்வி இங்கே மூன்றாம் நிலையிலும் கொண்டுள்ளது சண்டிகர் கல்வி துறை இதை கவனித்துக் கொள்கிறது. உள்கட்டமைப்பு, வளாகம், கூடுமிடம் மற்றும் விளையாட்டு வகையில் சிறந்த கட்டமைப்புள்ள சில அரசாங்க கல்லூரிகள் இங்கே உள்ளன. கல்லூரிகள் பஞ்சாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் வர்த்தகம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு நீரோடைகளில் கல்வி பெற முடியும். கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகத்திலும் படிப்புகள் வழங்கப்படுகின்றன இங்கே கல்லூரிகள் முதுகலை பட்டப்படிப்பு பல்வேறு பாடங்களில் உள்ள படிப்புகள் கருவி இசை, பொது நிர்வாகம், முதலியன உள்ள மற்ற கல்விகளையும் வழங்குகின்றன

உயர் தொழிற்கல்வி சண்டிகர் கல்லூரிகளில் பிரபலமாக உள்ளது. இந்த படிப்புகள் முக்கிய கல்விக்கு இணையாக இருக்கின்றன. அவை சுகாதார, வர்த்தகம், பாரா-மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பிரிவுகளில் வருகின்றன.

சண்டிகரின் சுற்றுலா இடங்கள்
அழகான ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் அதன் பெரிய திட்டமிடல் சுத்தமான சூழல், பெரும் கட்டமைப்புகள் மற்றும் அற்புதமான தோட்டங்களுக்காக ஒரு சுற்றுலா தலம் என நல்ல பெயரை சம்பாதித்துள்ளது. சாலைகள் ஒரு பெரிய நெட்வொர்க் மூலம் பல செக்டாரிகளில் பிணைந்து , நம்பமுடியாத நகரமாக உள்ளது. எனவே,சுற்றி வருவது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இன்று, அது இந்தியாவின் சுற்றுலாத் தலமாக ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இயற்கை நேசிப்பவர்கள் இந்த நகரத்திலுள்ள் தோட்டங்கள் மற்றும் நீர்தேக்கத்தை விரும்புவர்.

இங்குள்ள சில ஈர்ப்புகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானவை. இங்குள்ள பள்ளத்தாக்கை ஒரு தோட்டங்களின் மாலை என்று விவரிக்கலாம். மக்கள் இங்கே நிதானமாக நடை பயில விரும்புவர் செக்டார் 1 அமைந்துள்ள . ராக் கார்டன் கழிவுகளால் செய்யப்பட்ட அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. தோட்டத்தில் பல்வேறு வகையான கைவிடப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் உள்ளன. சுகானா ஏரி ஒரு கண்கவர் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது மற்றும் ஒரு மிக அழகிய பகுதியில் அமைந்துள்ளது காலநிலை இங்கே பறவைகள் ரீங்காரம் செய்வதை கேட்க ஒரு சிறந்த இடத்தில், அமைதியான வகையில் உள்ளது.

சண்டிகரின் போக்குவரத்து
சண்டிகர் ஏனைய மாநிலங்க்ள் மற்றும் நகரங்களுடன், சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பொது பஸ் சேவைகள் சண்டிகர் போக்குவரத்து நிறுவனம் (CTU) மூலம் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் துறை 17 மற்றும் 43ல் இண்டர் ஸ்டேட் பேருந்து நிலையங்களிலிருந்து (ஐஎஸ்பிடி) இயக்கப்படுகின்றன. தில்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இண்டர் மாநில பேருந்துகளும் சண்டிகர் போக்குவரத்து நிறுவனம் (CTU) மூலம் இயக்கப்படுகின்றன. சாலை வழியாக, இது நன்றாக தேசிய நெடுஞ்சாலை 22 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 21 மூலம் இணைக்கப்பட்டுள்ளது சண்டிகர் ரயில் நிலையம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே நெட்வொர்ககில், அது வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது..டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பல இடங்களுக்கு தேரடி விமானங்கள் சண்டிகர் விமான நிலையத்திலிருந்து உள்ளன. சணடிகர் மெட்ரோ ரெயிலும் நகரத்தில் உத்தேசிக்கப் பட்டுள்ளது அது இன்னும் சில வருடங்களில் இயக்கத்திற்கு வரும்.

Last Updated on : June 4, 2015