ஹரியானா வரைபடம்

Haryana Map in Tamil

ஹரியானா வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றைக் காட்டும் வரைபடம்.
ஹரியானாவைப் பற்றி
வட இந்தியாவிலுள்ள மாநிலமான ஹரியான, நவம்பர் 1, 1966 இல் உருவாக்கப்பட்டது, வளமான நிலம் உள்ளது மற்றும் இந்தியாவின் பசுமை நிலம் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி மாநிலம் மூன்று பகுதிகளில் ஹரியானாவால் சூழப்பட்டுள்ளது. ஹரியானாவின் தலைநகரான சண்டிகர், பஞ்சாபின் தலைநகரமாகவும் உள்ளது. ஹரியானாவின் பெரிய நகரம் பரிதாபாத்தாகும். ஹரியானா மாநிலம் 44, 212 சதுர. கிமீ பரப்பளவில் நீட்டப் பட்டிருக்கிறது.

ஹரியானாவை இரண்டு இயற்கைப் பகுதிகளாகப் பிரிக்க முடியும் ; துணை இமாலய டிராய் (தொப்பி) மற்றும் இந்திய கங்கை நதி சமவெளி. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக. 700 மற்றும் 900 அடி இடையே உயரத்தில் இருக்கும், சமவெளி வளமானது மற்றும் வடக்கிலிருந்து தெற்கே சரிவடைகிறது. ஹரியானாவின் தென்-மேற்கு உலர்ந்த, மணல் மற்றும் தரிசாக இருக்கிறது. அரியானாவில் வற்றாத ஆறு எதுவும் இல்லை. கக்கார் நதி அரியானா வழியாகப் பாய்ந்து, மாநிலத்தின் வடக்கு விளிம்புகள் வழியாக செல்கிறது.

ஹரியானாவின் சரித்திரம்
இப்போது ஹரியானா என்று அறியப்படும் – மத்யம பகுதி (மத்தியப் பகுதி) பிற்கால வேத காலம் (c. 800-500 BC), -இந்து ம்தத்தின் பிறப்பிடமாகும்.இங்கே தான் ஆரியர்களின் முதல் துதிப் பாடல்கள் பாடப்பட்டன மற்றும் மிகவும் பழமையான கையெழுத்துப் பிரதிகள் எழுதப் பட்டன.. கக்கர் பள்ளத்தாக்கில் நகர்ப்புற குடியேற்றங்கள். கி.மு.3000 யிலிருந்த்து ஆரம்பிக்கின்றன. கி.மு.1500 லிருந்து, ஆரிய பழங்குடிகள், இந்த பகுதியில் படையெடுத்த பல குழுக்களில் முதலாக மாறியது. இந்தியாவிற்கு இந்தியில் பாரத் என்று பெயர் கொடுத்த புகழ்பெற்ற பரதன் வம்சத்தின் வீடாக இந்தப் பகுதி தான், இருந்தது. மகாபாரதத்தில் பதிவு செய்யப் பட்ட கவுரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இடையேயான காவியப் போர், குருசேத்திரத்தில் நடந்தது. கிமு 3 வது நூற்றாண்டில், இந்தப் பகுதி மவுரிய சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது பிற்காலத்தில் அது முகலாயர்களின் முக்கியமான அதிகார அடிப்படையாக ஆகியது ; 1526ல் பானிப்பட்டில் நடந்த போர், இந்தியாவில் முகலாய ஆட்சியை ஸ்தாபித்தது.

ஹரியானாவின் தலைநகரம்
ஹரியானாவின் தலைநகரம் சண்டிகராகும், மற்றும் இது பஞ்சாபின் தலைநகரமும் ஆகும்.

ஹரியானாவின் பெரிய நகரம்
ஹரியானாவின் பெரிய நகரம் பரிதாபாத்

. ஹரியானா மொத்த பரப்பளவு பகுதி
ஹரியானா மாநிலம் 44, 212 சதுர. கிமீ பரப்பளவில் நீட்டப் பட்டிருக்கிறது.

ஹரியானாவின் சமீபத்திய மக்கள் தொகை
2011ல் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைக்குப் பிறகு, இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை, சதுர. கிலோமீட்டருக்கு 573, மக்கள் தொகை அடர்த்தி கொண்ட. 25,353,081 ஆகும்.

ஹரியானாவின் கல்வியறிவு விகிதம்
இந்த வட இந்தியா மாநிலம் 71.4% கல்வியறிவு விகிதம் கொண்டது.

ஹரியானாவின் இருப்பிடம்
புவியியல் ரீதியாக, 30.73° வடக்கு மற்றும் 76,78° கிழக்கே அமைந்துள்ள, ஹரியானா மாநிலம் இந்திய நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது. அதன் பாகங்கள் சில, தேசிய தலைநகரப் பகுதியில் (NCR) சேர்க்கப்பட்டுள்ளது, இந்த மாநிலம் அதன் வடக்கே இமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் எல்லைகளாலும், கிழக்கே உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட், தெற்கு, மேற்கே ராஜஸ்தானாலும் எல்லைகளைக் கொண்டது.

மக்கள் தொகை புள்ளி விவரம்
2011ல் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைக்குப் பிறகு, இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை, சதுர. கிலோமீட்டருக்கு 573 மக்கள் தொகை அடர்த்தி கொண்ட. 25,353,081 ஆகும். மாநிலத்தில், பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் என்ற அளவில் உள்ளது. இந்துக்கள் மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் மற்றும் முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் போன்ற மற்றும் கிரிஸ்துவர் சமயங்களை இருந்து மக்கள் எஞ்சிய மக்கள் கணக்கில் வருகிறார்கள். தலித் மற்றும் வால்மீகி உட்பட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மாநில மக்கள் ஆகின்றனர்.

பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு
ஹரியானாவில் பெரும்பாலான நிலம் விவசாயத்திற்கு ஏற்றது மற்றும் 60 சதவிகிதம் நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளது. நான்கில் மூன்று பாகம் மக்கள் விவாசாயத்தில் வேலை செய்கிறார்கள். மாநிலம் கோதுமை, அரிசியின் ஒரு பெரிய தயாரிப்பாளர் ஆகும். பிற முக்கிய பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் (பட்டாணி மற்றும் பீன் பயிர்கள் இருந்து சேகரிக்கப்பட்ட சமையல் விதைகள்), பார்லி, தினை, மற்றும் மக்காச்சோளம் ஆகியவை. உற்பத்தி, புது தில்லி மற்றும் (பழைய) தில்லி, சந்தைகளுடன் ஹரியானாவின் நெருக்கம் நல்ல சாலை மற்றும் ரயில் இணைப்புகள் மற்றும் உரங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விதைகளால் உபயோகத்தால்தூண்டப்படுகிறது. அரியானா அதன் பரிசு பெற்ற இளங்காளைகள் மற்றும் கறவை மாடுகளுக்கு புகழ்பெற்றுள்ளது. மாநிலத்தில் ஒரு விரிவான இரயில் அமைப்பு உள்ளது. தில்லி, அரியானாவின் கிழக்கு எல்லையில், முக்கிய விமான போக்குவரத்து மையமாக பணியாற்றுகிறது.

அரசு மற்றும் அரசியல்
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே, அரியானா மாநிலமும் ஒரு சடங்கு நிலையை கொண்ட ஒரு ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஹரியானா மாநில அரசின் தலைமை, நிறைவேற்றும் அதிகாரங்களைக் கொண்டுள்ள முதலமைச்சராவார். அது 90 உறுப்பினர்களுடன் ஒரு ஒற்றை அறை சட்டமன்றத்தைக் கொண்டது. இந்த மாநிலம் பாராளுமன்றத்திற்கு 15 உறுப்பினர்கள் அனுப்புகிறது.மக்களவை ராஜ்ய சபா (மேலவை) ஐந்து: மற்றும் மக்களவைக்கு (கீழ் அவை).பத்து. உள்ளூர் அரசு 21 மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) பாரதிய ஜனதா கட்சி (BJP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய லோக் தள் முதலியன.

கல்வி
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி, இந்த வட இந்திய மாநிலம் 76,64% கல்வியறிவு விகிதம் பெற்றிருக்கிறது. அரசால் மற்றும் தனியாரால் நடத்தப்ப்டும் மத்திய கல்வி வாரியம் (CBSE) அல்லது அரியானா வாரியம் பள்ளி கல்விஉடன் (HBSE) இணைந்துள்ள பல பள்ளிகள் உள்ளன. HBSE அனைத்து மட்டங்களிலும் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்துகிறது ரோதக், சோனிபட் மற்றும் குர்காவ் போன்ற நகரங்கள், பல உயர் கல்வி கல்லூரிகளுடன் மாநிலத்தின் கல்வி மையமாகி இருக்கிறது. மாநிலத்தில் பல தொழில்நுட்பம், ஆராய்ச்சி மேலாண்மை சார்ந்த கல்லூரிகள் உள்ளன. ஹரியானாவிலுள்ள் தேசிய மூளை ஆராய்ச்சி மையம், நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக உறுதி எடுத்துக் கொள்ள நாட்டின் ஒரே நிறுவனம் ஆகும்.

மொழி
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைப் போல, இந்த மாநில மக்களின் தாய்மொழி ஹரியான்வி. எனினும், அது ஒரு பேச்சு வழக்கு மொழியே தவிரம் அதிகாரப்பூர்வ மொழியாக கருதப்படவில்லை. இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகள் இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகும். ஹரியான்வி தவிர, பாங்குரு, பாக்ரி மற்றும் அஹிர்வதிம்i மாநிலத்தில் பேசப்படும் மற்றைய பேச்சு வழக்குகள் ஆகும்.

சமூகம் மற்றும் கலாசாரம்
இந்துக்கள், அரியானா மக்கள் தொகையில் 90 விழுக்காடு ஆகின்றனர். பெரும்பாலான சீக்கிய மக்கள் தொகை, இந்த மாநிலத்தின் வடகிழக்கு மற்றும் வடமேற்கே அமைந்துள்ளது ; முஸ்லிம்கள் டெல்லியின் பக்கத்திலுள்ள தென்-கிழக்கு மாவட்டங்களில் குவிந்துள்ளனர். ஜாட் (ஒரு விவசாயக் சாதி) ஹரியானாவின் விவசாய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் கிராமப்புற என்றாலும், நகரங்கள், வணிக, தொழில்துறை மற்றும் வேளாண் விற்பனை மையங்களாக, மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

ஹரியானியர்கள், எளிய், நேராக பேசக்கூடிய, ஆர்வமிக்க மற்றும் கடின உழைப்பாளி மக்கள்.ஆவர். தங்கள் பழைய சமூக மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அவர்கள் பாரம்பரிய உற்சாகத்துடன் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பிராந்தியத்தில் அதன் பிரபலமான கட்டுக்கதைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் இசைக்கருவிகள் உள்ளது. பெண்கள் மிகவும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உள்ளவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் ஆண்களுக்கு பண்ணைகளில் உதவி செய்கிறார்கள். மக்கள் மிகவும் எளிமையான உணவு பழக்கங்கள் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் கால்நடைகள் மீது அன்பு மற்றும் அவர்களின் உணவில் பால், தயிர் மிகுதிக்காக் அறியப்படுகிறார்கள்..

போக்குவரத்து
ஹரியானா மாநிலம், நாட்டின் முக்கியமான தொழில்துறை மையங்களாக இருப்பதாக், மிகவும் நன்றாக அண்டை மாநிலங்கள் மற்றும், இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஆகாய், சாலை மற்றும் ரெயில்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.

வானவழிகள்: சண்டிகர் விமான நிலையத்திலிருந்து இந்த மாநிலம் டெல்லி, லே, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் செல்லவும், திரும்பவும் இந்திய ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, பிவானி, ஹிசார், கர்னால், நர்னநால் போன்ற இடங்களில் பொது விமானதளங்கல் அமைந்துள்ளன. வாய்தூத் சேவைகள் சண்டிகர் வழியாக தில்லி, கக்கர் மற்றும், குலுவுடன் அரியானாவை இணைக்கிறது.

ரெயில்வேஸ்: சண்டிகர் ரெயில்வே நிலையம், வடக்கு ரெயில்வேயின் முனையமான இது, இந்த மாநிலத்தை மும்பை, கால்கா, டெல்லி மற்றும் பல இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. மற்ற இணைக்கும் ரெயில்வே நிலையங்கள் அம்பாலா, இச்சார், ஜிந்த், கால்கா, குருஷேத்ரா, பானிபட் மற்றும் ரோதக்கில் அமைந்துள்ளன.

சாலைவழிகள்: மாநிலம், உட்புறம், வெளிப்புறம், இரண்டு புறமும் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, தேசிய தலைநகர் தில்லியின் அருகாமை, மாநிலத்தை எளிதாக நாட்டின் பிற பகுதிகளுடன், எண்ணற்ற மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம், இணைக்க உதவுகிறது.

ஹரியானா மாநிலத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்க 44 சுற்றுலா வளாகங்கள் ஒரு பிணையமாக இருக்கின்றன. ஹரியானாவில் மிகவும் அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லுமிடங்கள் கீழே:

  • பத்கல் ஏரி
  • டும்டமா ஏரி
  • காமா
  • குருஷேத்ரம்
  • மேக்பி சூரஜ்குண்ட்
  • மோர்னி மலைகள்
  • பஞ்ச்குளா
  • பானிபட்
  • பிரித்விராஜ் கி கச்சேரி
  • சுலதான்புர் பறவைகள் சரணாலயம்
  • தானேஸ்வர்
  • டில்யார் ஏரி
  • யடவீந்த்ரா தோட்டம்

ஹரியானாவின் தட்பவெப்ப நிலை
வட இந்தியா சமவெளிகளில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் அமைப்பு, இடத்தை கோடை காலத்தில் மிகவும் சூடாகவும் மற்றும் குளிர்காலத்தில் மிகவும் குளிராகவும் செய்கிறது. இருப்பினும், வட இந்தியாவின், பல்வேறு தட்பவெப்ப நிலையிலுள்ள் இந்த மாநிலம் மூன்று தனித்துவமான பருவகாலங்களை எதிர்கொள்கிறது. மே மற்றும் ஜூன் மாதங்கள் மிகவும் சூடான மாதங்களாலும் அப்போது வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. ஆனால் டிசம்பர் மற்றுன் ஜனவரி மாதங்கள் மிகவும் வருடத்தின் குளிரான மாதங்களாகும் அப்போது வெப்பநிலை மிகவும் குறைவான as 1° செல்சியஸ் வரை செல்கிறது. அரியானா மழைக்காலம் ஜூலை மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை தொடர்கிறது. மொத்த மழையளவில் 80% இந்த காலத்தில் தான் நடக்கிறது, அது சில சமயம் வெள்ளத்தைக் கூட ஏற்படுத்துகிறது.

மாநிலத்திற்குச் செல்ல சிறந்த நேரம்
.ஹரியானாவிற்கு வருடம் முழுதும் செல்ல முடியும் என்றாலும், இந்த வட இந்தியா மாநிலத்தை பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் மார்சிற்கு இடைப்பட்ட காலமாகும்.

அரியானா எதற்கு பிரபலமானது?
இந்த மாநிலம், வரலாற்று ரீதியாக நாட்டில் புகழ்பெற்ற குறு பகுதியின் ஒரு பகுதியாகவும், அத்துடன் சிந்து சமவெளி நாகரீகத்திற்குத் தொட்டலாகவும் அறியப்படுகிறது. எனினும், தற்போது, இந்த இடம் ஆட்டோமொபைல் மற்றும் இந்திய ஐடி (தகவல் தொழில்நுட்பம்) முக்கிய மையமாகவும் உள்ளது. இது டிராக்டர்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் நாட்டின் முன்னணி தயாரிப்பாளராகும்.அதைத் தவிர, இந்த மாநிலம், இந்தியாவில் பால் மற்றும் உணவு தானிய உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்.உள்ளது.

ஹரியானாவின் ஹோட்டல்கள்
அதன் பரந்த சுற்றுலாத் திறனுடன் வேகமாக வளர, விடுதிகள் மாநிலம் முழுவதும் காளான்கள் போல் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தங்கள் பாரம்பரிய விருந்தோம்பல் மற்றும் நேர்த்தியான சமையலுக்காக அறியப்பட்ட அவர்கள், உங்கள் தங்குதலை மறக்கமுடியாததாகச் செய்வார்கள்..

Last Updated on : May 23, 2015