அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரைபடம்

Andaman and Nicobar Islands Map in Tamil

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரைபடம்
* அந்தமான் நிக்கோபார் தீவுகளின் விரிவான் வரைபடம்
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் பற்றி
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாகும் மற்றும் இது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • தொல்பொருள் ஆதாரங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முதல் குடியேற்றங்கள் கற்காலத்தின் மத்தியம் வரை செல்வதை நிரூபிக்கின்றன.
  • அந்தமானீஸ் அந்தமான் தீவுகளின் முதல் குடிமக்களாக இருந்தார்கள் என்று கூறப்படுகிறது
  • 1850 வரை, அந்தமானீஸ் முழு தனிமையில் வாழ்ந்தார்கள் ; 1850க்கு பிறகே அவர்கள் வெளிஉலகத்துடன் தொடர்புக்கு வந்தனர்.
  • நிக்கோபாரீஸ், நிக்கோபர் தீவுகள் பழங்குடியினராக இருந்தனர். அவர்கள் ஷோம்பென்சுடன் நிகோபார் குழு தீவுகளுடன் வாழ்ந்தனர்.

18ஆன் நூற்றாண்டில், பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வந்த பின், இந்த தீவுகள் உலக காட்சியில் வெளிப்பட்டது.ஆனால், பிரிட்டிஷ் காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தண்டிக்கப்பட்ட மக்கள் வைக்கப்பட்டிருந்த 'காலாபானி' என இழிபுகழ் பெற்றது. ஆங்கிலேயர்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளை சிறையில் வைத்து ஒரு கவர்ச்சியான தீவை 'தண்டனைக்குரிய காலனி'யாக, மாற்றினர். பல ஆண்டுகளாக, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு 'தண்டனைக்குரிய காலனி' என்ற புகழ் கீழ் இருந்தது.ஆனால் இந்தக் காட்சி சமீப வருடங்களில் கடுமையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில், இந்தத் தீவிற்கு செலவத்ற்கு தடை இருந்தது மற்றும் புகழ்பெற்ற மக்கள் இங்கே வருகை செயவதை வெறுத்தனர்.ஆனால் இன்று, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்,இந்திய சுற்றுலாவின் மிகவும் விரும்பப்பட்ட இடங்களுக்கு மத்தியில் உள்ளன. கவர்ச்சியான இடங்களின் இருப்பு இங்கே சுற்றுலாத் துறை மேம்படுவதில் அதிசயங்கள் வேலை செய்துள்ளது. இந்தப் பிண்ணனியில்,விசேஷ்மாக குறிப்பிட வேண்டிய இடங்களில் சில:

அந்தமான் தீவுகள் :
  • நீளத் தீவு
  • நீல் தீவு
  • ரங்கட்
  • டிக்லிபூரி
  • மாயாபந்தர்
  • சிறிய அந்தமான தீவுகள், மற்றவை

நிகோபர் தீவுகள்:
  • கச்சல்
  • கார் நிக்கோபர்
  • கிரேட் நிக்கோபர் போன்றவை.

போர்ட் ப்ளேயர்:
  • காந்தி பூங்கா
  • மகாத்மா காந்தி தேசிய பூங்கா
  • சிடியா டபு
  • சிப்பிகாட் பண்ணை
  • கோலின்பூர்
  • Mini Zoo,
  • மவுண்ட் ஹரியத்
  • மதுபன் போன்றவை

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் -உண்மைகள்
எண்ணற்ற பழங்குடிகளுக்கு வீடான அந்தமான மற்றும் நிக்கோபர் தீவுகள், வங்காள விரிகுடாவில் மேற்கு வங்க கடற்கரைக்கு தென்கிழக்கு சுமார் 1,220 கி.மீ. மற்றும் சென்னைக்கு 1,190 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அந்தமானில் முக்கிய தீவுகள் லேண்ட் பால் தீவு, மத்திய அந்தமான், தெற்கு அந்தமான் போர்ட் பிளேர் மற்றும் சிறிய அந்தமான். தெற்கேயுள்ள நிக்கோபர், கார் நிக்கோபர்,க்ரேட் நிக்கோபர், சோவ்ரா, தெரஸா,நான்கோவையர், கச்சல் மற்றும் சிறிய நிக்கோபரை உள்ளடக்கியது. இந்த தீவுகளின் இரண்டு குழுக்கள், அந்தமான மற்றும் நிக்கோபர், ஒரு ஆழமான 10 டிகிரி கால்வாயினால் பிரிக்கப்பட்டுள்ளன. தீவுகளில் 12, குறிப்பாக வடக்கேயுள்ள கார் நிக்கோபர் குடியேற்றம் இருக்கிறது, அதே சமயம் க்ரேட் நிக்கோபர், பெரிய மற்றும் தென் கோடியிலுள்ள தீவு, கிட்டத்தட்ட உபயோகப்படுத்தப்படாது உள்ளது, இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகர், அந்தமான் தீவிலுள்ள போர்ட் ப்ளேயர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பிரபலமாக எமரால்டு தீவுகள் என அழைக்கப்படும். இப்போது அருங்காட்சியகமாக உள்ள முந்தைய 'காலா பானி' அல்லது செல்லுலார் சிறை, இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளங்களுக்கு இடையில் உள்ளது.

வரலாறு
இந்த தீவுகள் இருப்பு, முதன் முதலில் 9வது நூற்றாண்டில அரபு வியாபாரிகளால், அவர்கள் சுமத்ரா ஜலசந்தியை அடைய இந்த தீவுகளை கட்ந்த போது அறிவிக்கப்பட்டது. முதல் மேற்கத்திய பார்வையாளர், மார்கோ போலோ, அவர் அதை தலையின் நிலம் – வேட்டைக்காரர்கள்”. 17 வது நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவுகள் மராட்டியர்களுடன் இணைக்கப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில், அவை அடிக்கடி, பிரிட்டிஷ் டச்சு மற்றும் போர்த்துகீசியம் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றிய மராத்திய அட்மிரல் கன்ஹோஜி ஆங்க்ரே அடிப்படையாக இருந்தன.. ஆங்ரே 1729 ஆம் ஆண்டில் அவர் மரணமடையும் வரை, அருமையாக பிரிட்டிஷ் / போர்த்துகீசியம் கடற்படைப் மூலம் முறியடிக்க முடியாதவராக இருந்தார். நிக்கோபார் தீவுகள் 1869 ஆம் பிரிட்டனுடன் இணைக்கப்படடது மற்றும் 1872 ல் ஒரே நிர்வாக அலகாக அமைக்க அந்தமான் தீவுகளுடன் சேர்ந்தன..1942 லிருந்து 1945 ல் உலகப் போர் முடியும் வரை, ஜப்பனீஸ் படைகள் இந்த தீவுகளை கைப்பற்றியிருந்தன், அது 1947 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து விடுதலை பெற்றது போது நிலப்பகுதியின் கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு மாற்றப்பட்டது..

புவியியல்
புவியியல் ரீதியாக 11 ° 41 'N மற்றும் 92 ° 46' E,அமைந்துள்ள இந்தத் தீவுகள் வங்காள் விரிகுடாவின் ஒரு பகுதியாகும். தீவுகளின் இரண்டு குழுக்கள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இந்திய முக்கிய நிலப்பகுதியில் தென்கிழக்கு பகுதியை நோக்கி அமைந்துள்ளது. சிறு தீவுக் குழுக்கள், மொத்தம் 8.249 சதுர. கி.மீ. பகுதி மீது தீவுகள் மற்றும் பாறைகள் ப்ரவியுள்ளது..இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் ப்ளேயர்,இந்த இடத்தின் பெரிய நகரமும் கூட. இந்த தீவுகளில் வெளியூர் (தரநிலை ட்ரங்க் அழைப்பு) குறியீடு 03192 ஆகிறது

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் காலநிலை
கடலால் சூழப்பட்டுள்ள அந்தமான மற்றும் நிக்கோபர் தீவுகள், ஆண்டு முழுவதும் ஒரு மிதமான வெப்பநிலை அனுபவிக்கிறது. சுமார் 80% ஒரு ஈரப்பதத்துடன், கடல் காற்று 23 ° C மற்றும் 31 ° சி இடையே உள்ள வரம்பு வெப்பநிலைக்கு உதவுகிறது. தீவுகளில் வாழும் மக்கள், வருடத்தின் பல்வேறு கட்டங்களில் ஈரமான பருவமழையைப் பெறுகிறார்கள். தென்மேற்கு காற்று மூலம் கொண்டு வரப்படும் ப்ருவமழை மே மாத நடுப்பகுதியில் அமைகிறது அக்டோபர் முற்பகுதியிலும் வரை தொடர்கிறது. பின் ஒன்றரை மாத இடைவேளைக்குப் பிறகு, திரும்பவும் வடகிழக்கிலிருந்து பருவமழை நவம்பரில் தொடங்கி டிசம்பர் வரை நீளுகிறது.

மக்கள் தொகை புள்ளியியல்
2011 கணக்கெடுப்பின் படி, இந்த நாட்டின் பிரபலமான தீவுகளின் ஜனத்தொக 3.80,371, ஒரு ச்.கிமீட்டருக்கு 46 மனிதர்கள் அடர்த்தியுடன் உள்ளது. இந்தத் தீவன் பாலியல் விகிதம் 1000 ஆண்களுக்கு 878 பெண்களாவர்.

மொழிகள்
இந்த தீவுகளின் முக்கிய மொழி நிக்கோபரீஸ். இருப்பினும் ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலமும் பரவலாக இங்கே உபயோகிக்கப் படுகின்றன.

அரசு மற்றும் அரசியல்
அரசாங்கம் மற்றும் அரசியல்,அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆட்சியில் இருந்து சற்றே மாறுபட்ட ஒரு வழியில் இயங்குகின்றன தீவுகளில் அரசு மற்றும் அரசியல் பற்றி குறிப்பிடத்தக்க விஷயம், ஒரு சட்டமன்றம் குறைபாடு தான். துணைநிலை ஆளுநர் அந்தமான் நிக்கோபார் அரசாங்கத்தின் செயற்குழு தலைவராகவும் தன்னை கொண்டுள்ளார். நிர்வாகி சாரி பல்வேறு துறைகள் தலைவர்கள் நேரடி கண்காணிப்பின் கீழ், அவரது மேற்பார்வையில் இயங்குகிறது மாநில நீதித்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வருகிறது துணைநிலை ஆளுநர் அந்தமான் நிக்கோபார் தீவுகள், அரசாங்கம் மற்றும் அரசியலில் மிக முக்கியமான நபர் ஆவார். ஒரு முறையான சட்ட சபையை இல்லாத நிலையில், துணைநிலை ஆளுநர் மாநிலத்தின் முழு சட்டமன்ற அமைப்புமுறையையும் கவனிக்கிறார். பல்வேறு துறைகள் அவரதுது மேற்பார்வையில் வேலை. செய்கின்றன. மாநில அரசு துறைகள் இயக்குநரகம் மற்றும் செயலகம் என் இரு நிலைகளில் இயங்குகின்றன மற்றும் மாநில நிர்வாகிகள் கவனித்துக் கொள்கின்றன. பல மத்திய அரசு நிறுவனங்கள் இருப்பு அந்தமான் நிக்கோபார் நிர்வாக அதே போல் ஆட்சி சுயவிவரத்தை அதிகரிக்க உதவுகிறது.

பொருளாதாரம்
அந்தமான் மகத்தான ஆற்றல் வளம் பெற்றது, ஆனால் அவை இப்போது வரை பயன்படுத்திக்கொண்டது இல்லை வளர்ச்சி முக்கியமறறு வருகிறது ஆனால் மக்களில் ஜனத்தொக அபாயகரமாக அதிகரித்துள்ளது. ஆடம்பரமான மழைக்காடுகள் அந்தமான் மரங்களை ஒரு 'தங்க சுரங்கமாக” செய்கின்றன. வெப்ப மண்டல பழங்கள் மிகுதியாக தீவுகளில் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கே மீன்வள சாத்தியம், தொழில்துறை வளர்ச்சிக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. தென்னை மற்றும் பாக்கு நிக்கோபார் தீவுகளில் முக்கிய பணப் பயிர்களுகான போதும் நெல், இங்கு முக்கிய பயிராக உள்ளது வயல் பயிர்கள், அதாவது பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலா கூட வளர்க்கப்படுகின்றன. ரப்பர், சிவப்பு எண்ணெய், பாமாயில் மற்றும் முந்திரி இந்த தீவுகளில் ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் முக்கிய தொழில்கள் பிவிசி காண்டூயிடை குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், வர்ணங்கள் மற்றும் varnishes, ஃபைபர் கண்ணாடி, குளிர்பானங்கள் மற்றும் பானங்கள், மற்றும் எஃகு சாமான்கள்அடங்கும்.

வழக்கமான பயணிகள் கப்பல் சேவைகள் அதாவது MV ஹர்ஷவர்த்தனா, MV அக்பர், மற்றும் MV நிக்கோபர் போர்ர்ப்ளேயர் மற்றும் சென்னை, கொல்கத்தா மற்றும் வைஜாக்கிற்கிடையே செல்கின்றன.

கட்டமைப்பு
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தின் கலையாக இல்லை ஆனால் இன்னும் அது இருக்கும் தொழிற்துறைக்கு ஆதரவு கொடுக்க ம் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளது.. எந்த இடத்திலும் உள்கட்டுமான முக்கிய உறுப்புகள் அதன் தொழில், போக்குவரத்து, தகவல் தொடர்பு, போன்றவையாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்கட்டமைப்பின் முக்கிய அங்கம், அதன் போக்குவரத்து அமைப்பாக உள்ளது. இது சம்பந்தமாக, தீவுகள் குழு போக்குவரத்து அமைப்பு நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் நலனுக்காக நகருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மோட்டார் போக்குவரத்து துறை, போர்ட் பிளேர் தவிர மற்ற பத்து தீவுகளில் தங்களது சேவைகளை நீட்டிக்கும் சமயத்தில் மாநில போக்குவரத்து சேவைகள் நிறைய தடங்களில் நிறைய பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

கல்வி
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைப் போல, அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் ஒரு கல்வி அமைப்பு உள்ளது.இங்குள்ள மேல்நிலைக் கல்வி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைக்கப் பெற்றதாகும்.. கல்லூரிகள் பொதுவாகத புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் புது தில்லி இணைந்துள்ள சில பாலிடெக்னிக்குகள் உள்ளன. இந்த இடத்தில் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் சட்ட துறையில் தொழில்முறை பட்டங்களைப் பெற அங்கு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இல்லை. இங்கே அதைப் போன்ற நிறுவனங்களைக் கொண்டு வர அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப் படுகின்றன.

சமூகம் மற்றும் கலாச்சாரம்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இரு வேறுபட்ட பூர்விக கலாச்சாரங்களுக்கு வகைப்படுத்தப்படும். ஒன்று அந்தமானில் நிகிரிட்டோ மக்கள் தொகை மற்றும் இன்னொன்று ஆட்டோஸ்தோன்ஸ். அதாவது மங்கோலாய்டு நிக்கோபாரீஸ், மற்றும் ஷோம்பென். இருவரும் முந்தைய மற்றும் பிந்தைய பிரிட்டிஷ் காலங்களில்ம ,மற்றும் சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த இரண்டு கலாச்சாரங்கள் அவர்களின் தனித்துவமான அடையாளங்களை தக்க வைத்துள்ளன.அந்தமானிலுள்ள அசல் பிறப்புரிமைம் குழு ஆஞ்ஜெஸ், அவர்கள் சிறிய அந்தமானில் வசிக்கின்றனர்ஆஞ்ஜெஸ், மற்ற அந்தமானீஸ் பழங்குடியினர் போனறு நெகிரிடோ வம்சாவளியினர். அவர்கள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், தேன் சேகரிக்கும மற்றும் மீன்பிடி செய்யும், மற்றும் சுதந்திரமாக வெளியுலகுடன் தொடர்பு ஏற்றுக்கொளளும் தீவுகளின், ஒரே பழங்குடியினர் ஆவர். நிக்கோபாரில் ,ஷோபென்ஸ் மட்டுமே ஒரே பழங்குடியினர் மற்றும் அவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள விருப்பமில்லாதவர்கள்.

நிக்கோபரீஸ்,, பெரிய குழு, பர்மிய, மலாய், ஷான், மோன் தோற்றத்தின் கலவையாகத் தெரிகிறது அவ்ர்கள் பணத்தை மறுத்து பண்டமாற்று முறையை விரும்பும் ஒரு நட்புள்ள மற்றும் மகிழ்ச்சியான மனிதர்கள். இறந்தவர்களுடன் பேசிக் கொள்வது நிக்கோபார் நடைமுறையிலுள்ளத பல புதிரான சடங்குகளில் ஒன்றாகும்.

குறிப்பிட்ட குழுக்களின் விஷேட பண்டிகைக்கால கொண்டாட்டங்களில் வங்காளிகளுக்கு துர்காபூஜை, தமிழர்களுக்கு பங்குனி உத்திரம், தெலுங்கர்களுக்கு பொங்கல் மற்றும் மலையாளிகளுக்கு ஓணம் ஆகியவை அடங்கும். இந்துககள், முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர் என பிரிந்துள்ள உள்ளூரில் பிறந்த அந்தாமானீஸ் மூன்று மத்ததின் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். முக்கிய பண்டிகைகளில் சில, சிவராத்திரி, ஜென்மாஷ்டமி, ஹோலி, தீபாவளி, ராமநவமி, ஈத், கிருஸ்துமஸ், புனித வெள்ளி மற்றவை. உள்ளூர் மத்தியில் மூன்று மத குழுக்கள் ஒருவருக்கொருவர் விழாக்களில் பங்கேற்கின்றனர்.

இதனால் அந்தமான மற்றும் நிக்கோபர் தீவுகள் மக்கள், அவர்கள் அவர்கள் முதலில் இருந்து வரும் பகுதிகள் எதுவானாலும், அல்லது அவர்கள் பின்பற்றும் மதம் எதுவானாலும் அல்லது மொழி அல்லது பேசும் வழக்கு எதுவானாலும் பல பொதுவான கலாச்சார பண்புகளைக் கொண்டுள்ளனர். அந்தமான் மற்றும் நிக்கோபார் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் சுமுக இணைந்து இருப்பது ஆகும் வகுப்புவாத வன்முறை இங்கே கேள்விப் படாதது. அங்கு மத விழாக்கள் அனைத்திலும் சுமுக பங்கேற்பு இருக்கிறது மற்றும் மதத்திற்கு இடையேயான திருமணங்கள் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

சுற்றுலா:
இந்தியாவின் பிரதான நிலப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இந்த இடம், மிதக்கும் மரகத தீவுகள் மற்றும் பாறைகளின் ஒரு குழுவாக உள்ளது

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், கவர்ச்சியான கடல் கடற்கரைகள் தென்னை பனை மரங்கள் எல்லையாகவும் மற்றும் வெளிப்படையான நீல நீரையும் கொண்டது. இது நீநீருக்கடியில் பவளப்பாறைகள் மற்றும் மற்ற கடல் உயிர்களுக்கு வீடுகளாக பிரபலமானது. மாசுபடாத நீர், சிற்றோடைகள் இணைந்த வரிசையான சதுப்பு நிலங்கள் மற்றும், அரிதான இனத் தாவரம் மற்றும் விலங்கு வாழ்க்கை உங்களை இயற்கையோடு காதல் செய்ய வைக்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் பிரபலமானது எவை ?
இந்தியாவின் பிரதான நிலப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட இந்த இடம், மிதக்கும் மரகத தீவுகள் மற்றும் பாறைகளின் ஒரு குழுவாக உள்ளது

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், கவர்ச்சியான கடல் கடற்கரைகள் தென்னை பனை மரங்கள் எல்லையாகவும் மற்றும் வெளிப்படையான நீல நீரையும் கொண்டது. இது நீநீருக்கடியில் பவளப்பாறைகள் மற்றும் மற்ற கடல் உயிர்களுக்கு வீடுகளாக பிரபலமானது. மாசுபடாத நீர், சிற்றோடைகள் இணைந்த வரிசையான சதுப்பு நிலங்கள் மற்றும், அரிதான இனத் தாவரம் மற்றும் விலங்கு வாழ்க்கை உங்களை இயற்கையோடு காதல் செய்ய வைக்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மிகவும் முக்கியமான ஈர்ப்புகள்:
அந்தமான் மற்றும் நிக்கோபார் என்ற 572 தீவுகளில் குழு அதன் சுத்தமான சூழலில் மற்றும் படிக தெளிவான நீர்நிலைக்களுக்கான ஒரு இயற்கை சொர்க்கம் என கருதலாம். பசுமையான மழை காடுகள் மற்றும் சூரியன் முத்தமிடும் கடற்கரைகள்ளால் மூடப்பட்டி பல்வேறு மலைப்பாங்கான பகுதிகள் இந்த இடத்திலன் சில முக்கியமான சுற்றுலா பயணிகளைக் கவரும இடங்களாகும். இந்த தீவுகள் ஸ்கூபா டைவிங், மலையேற்றம், ஸ்நோர்கெலிங் முகாம் மற்றும் பல்வேறு மற்ற தண்ணீர் விளையாட்டு போன்ற துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் கூட அறியப்படுகிறது. பின்வருபவை ஒருவர் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு பயணம் போது தவற விடக்கூடாத புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில், சில:
  • பாராடாங்க்
  • வெறுமையான தீவு
  • செல்லுலார் சிறை
  • ஹாவ்லாக் தீவு
  • கோர்பின் கோவ் கடற்கரை
  • ராத்நகர் கடற்கரை
  • நினைவு அருங்காட்சியகம்
  • மீன்களின் அருங்காட்சியகம்
  • ராஸ் தீவு
  • சிடியா டபு
  • மவுண்ட் ஹரியத்
  • மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா
  • காந்தி பூங்கா
  • நீல் தீவு
  • கச்சல்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பிரபலமான சுற்றுலாத் தலங்களை சில: தேசிய நினைவகம், கடல் அருங்காட்சியகம், கடற்படை கடல் அருங்காட்சியகம், ஸ்மிரிதிகா அருங்காட்சியகம், ஹாடோ விலங்கியல் தோட்டம், கோர்பின்ஸ் கோவ், மற்றும் பிற கடற்கரைகள், மற்றும் ஹம்ப்ரி கஞ்சில் நினைவு.சின்னம். போர்ட் பிளேயரிலுள்ள அந்தமான் நீர் விளையாட்டு வளாகம், சாட்டம் மரம் அறுக்கும் ஆலை (ஆசியாவிலேயே பெரியது) சிடியா டாபு, கடல் அருங்காட்சியகம், சிவந்த தோலின் தீவு மற்றும் ஹாவ்லாக் ஆகியவை மற்ற ஈர்ப்பவையாகும். கோர்பின்ஸ் கோவ்,.வாண்டூர் கடற்கரை, Iசிப்பிகாட் நீர் விளையாட்டு வளாகம்,சிங்கியூ தீவு மற்றும் ஜாலி பாய் தீவு ஆகியவை தீவில் சில துணிச்சலான இடங்கள்.

போக்குவரத்து
அந்தமான் நிக்கோபார் தீவுகள், நாட்டின் பிற பகுதிகளுடனும் அத்துடன் வெளிநாட்டு இடங்களுடனும் விமான மற்றும் நீர்வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தீவுகளில் உள்நாட்டில் பயணம் செய்ய பஸ் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்ற முறைகளிலும் கிடைக்கிறது. தீவாக இருப்பதால், இந்த இடம் ரெயில் மூலமாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்க்ப் படவில்லை. போர்ட் ப்ளேயரின் வீர் சவார்கர் விமான நிலையம் தீவுகளை ஆகாயம் மூலமாக நாட்டின் மற்ற் பகுதிகளுடன் இணைக்கிறது. நீர்வழி அந்தமான் நிக்கோபாருக்கு இரண்டு வழிகளில் வெளி, அதே போல் உள் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது. போர்ட் பிளேர், இடைநிலை துறைமுகம், இந்த தீவுகளில் முக்கிய துறைமுகமாகப் பணியாற்றுகிறது. மாநில போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தவிர, இந்த தீவுகளில் வசிப்பவர்கள் தனியார் டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாவை மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு எளிய மற்றும் வேகமான பயணம் செய்யமோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களைக் கூட பயன்படுத்துகின்றனர்.

Last Updated on : June 9, 2015